திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை, காளிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தயாளன் இவருக்கு 1.1/2 வயதில் புவனேஷ் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் அத்திமாஞ்சேரி பேட்டையில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் அங்கு சென்று, தன் மாமியார் வீட்டில் தங்கியுள்ளார்.

அப்போது, குழந்தை புவனேஷுக்கு இட்லி ஊட்டும் போது, அது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே தயாளன் தன் குழந்தையை, திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு குழந்தை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை புவனேஷ், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, பொதட்டூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்