ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கேளல் கிராமத்தில் வசித்து வருபவர் வினோபா ராஜன் இவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாததால் இத்தம்பதி விரத்தியில் இருந்துள்ளனர். இந்த நிலையில் தம்பதி மற்றும் மாமனார் உள்பட அனைவரும் ஒரே குடும்பமாய் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆனால் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் மருமகள் கனிமொழிக்கு, மாமனார் முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மருமகள் கனிமொழி தனது கணவர் வினோபா ராஜனிடம் இது குறித்து பலமுறை கூறியுள்ளார். ஆனால், தனது தந்தை அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்று வினோபா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கனிமொழி இப்பிரச்னைக்கு தானே முடிவுகட்ட தீர்மானித்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் குழம்பில் எலிபேஸ்ட் மற்றும் குருணை மருந்து இரண்டையும் கலந்து மாமனாருக்கு உணவு கொடுத்து உள்ளார். அதை சாப்பிட்ட மாமனார் முருகேசன் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

இதனை கனிமொழி யாரிடமும் கூறவில்லை. எனினும் மனஉளைச்சலில் இருந்த அவர் காவல் நிலையத்தில் தானே நேரில் சென்று சரணடைந்தார். போலீஸ் விசாரணையில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனாரை விஷம் வைத்து தான் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விஷம் வைத்துக் கொன்றதாக மருமகள் கனிமொழியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *