கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தம்பதிகள்மணிகண்டன்- சரோஜினி. இவர்களுக்கு நிவ்யாஸ்ரீ என்ற 2 1/2 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் திடீரென குழந்தை நிவ்யாஸ்ரீ இருந்துள்ளார். இதுகுறித்து சந்தேகமடைந்த உறவினர்கள் கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குழந்தை நிவ்யஸ்ரீயின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

தாய் சரோஜினியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் இளைஞர் ஒருவருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதாகவும், தங்களுடைய கள்ள காதலுக்கு குழந்தை நிவ்யஸ்ரீ இடையூறாக இருந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் சரோஜினி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *