திருச்சி உய்யக் கொண்டான் திருமலை கணபதி நகரில் வாடகை வீட்டில் தங்கி பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு விசுவல் கம்யூனிகேஷன் படித்து வருபவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த அபிபோஸ்பான் வயது 20 இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் காணப்பட்டு வந்ததாக தெரிகிறது இந்நிலையில் நேற்று இரவு அபி போஸ்பான் தனது தாய்க்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் சாப்பிட்டீர்களா? நான் சாப்பிட்டேன் மேலும் எனக்கு மனசு சரியில்லை பிறகு பேசுகிறேன் என கூறி செல்போனை துண்டித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து தனது தந்தையின் வாட்ஸ் அப் செல்போனுக்கு எனக்கு வாழ பிடிக்கவில்லை படிக்க பிடிக்கவில்லை நான் சாகப் போகிறேன் என்று உருக்கமாக பேசி வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது தந்தை செல்போனில் மகன் அனுப்பிய ஆடியோவை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக மகனின் நண்பர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது மகனை காப்பாற்றும் படி கூறினார். உடனே நண்பர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அபி போஸ்பான் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவம் இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபி போஸ்பான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *