பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தமிழக அரசு அகவிலைப்படியை வழங்க வேண்டும் நிறுத்தப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை உடனே வழங்க வேண்டும்

 என்பது உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் சிராஜுதீன் தலைமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் துளசிராமன், மாநில செயலாளர் செந்தமிழ் செல்வன்,மாவட்ட செயலாளர் மதிவாணன், சங்க கிளை நிர்வாகிகள் வெள்ளைச்சாமி நாகராஜன் கலைவாணன் ராஜப்பா உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *