தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து இளையோருக்கான திருச்சி மாவட்ட கலெக்டர் 2022 மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் (லேட்) மோகன் நினைவு சுழற் கோப்பைக்கான 2 நாள் தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விளையாட்டு போட்டியை தமிழ்நாடு சிறப்புக் காவலர் பயிற்சி பள்ளியின் முதலாவது பெட்டாலியன் அணி கமெண்ட் ஆப் போலீஸ் ஆனந்தன் தொடங்கி வைத்து வீர வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் 100 மீட்டர் முதல் 1500 மீட்டர் தூரம் வரை ஓட்ட பந்தையம், நீளம் தாண்டுதல், குண்டு எரிதல் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்‌

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீராங்கனைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 13,14,15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறும் மாவட்ட மாநில அளவில் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

 

இந்த விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சுகந்தி அண்ணாவி செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *