தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது.

இந்த மிதிவண்டி போட்டியினை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் பங்கேற்ற 10-வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு 2.5 கிலோமீட்டர் தூரமும்,

14- வயதுக்கு- உட்பட்ட சிறுவர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும், 18-வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் மற்றும் 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 20 கிலோமீட்டர் தூரமும் மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

 இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *