வாழ்வாதாரம் இழந்த ஏழை, எளிய பொதுமக்களுக்கு கலைஞர் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை அமைச்சர் கே என் நேரு வழங்கினார். தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பாதிப்பின் காரணமாக வாழ்வாதாரம் இழந்த ஏழை, எளிய பொதுமக்களுக்கு பல்வேறு கட்சியினர் சமூகநல அமைப்பினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை திருச்சி மாநகராட்சி 41ஆம் வட்ட செயலாளர் கிராப்பட்டி செல்வம் ஏற்பாட்டின் பேரில்கலைஞர் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு 5கிலோ அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்புகள் அடங்கிய பொருட்களை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சுமார் 2000 பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் அன்பழகன் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, முன்னாள் துணை மேயர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்