கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் சாஜன் வயது 28 இவரும், பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த அனிஷா வயது 26 என்ற பட்டதாரி பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருமே தனியார் நிறுவனங்களில் நல்ல பணியில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பின்பு காதல் ஜோடியான தம்பதிகளுக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சனை தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அனிஷா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று மாலை சாஜன் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து, தனியாக இருந்த அனுஷா அவரது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அனுஷாவின் மாமியார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அனுஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடந்து எட்டு மாதங்கள் ஆன பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டதால், அவரின் மரணம் குறித்து பத்மநாபபுரம் ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *