தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவுகளை செய்பவர்களுக்கு அரசு பணி இடத்தில் வேலைவாய்ப்புகளை பெற முடியும்.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2014, 2015, 2016ஆம் வருடங்களில் தங்கள் பதிவை பல்வேறு காரணங்களால் பெரும்பாலான பதிவுதாரர்கள் புதுப்பிக்க தவறியுள்ளனர். இதன் காரணமாக இவர்களுக்கு அரசு பணிகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் தமிழக அரசு இவர்களின் நலன் கருதி மீண்டும் ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. முன்பாக 2017, 2018 மற்றும் 2019ஆம் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஏற்கனவே புதுப்பிக்க சலுகை வழங்கி இருந்தது.

இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்பாக வேலைவாய்ப்பு பதிவை அலுவலகத்திற்கு நேரில் சென்று புதுப்பிக்க கூடிய நிலை இருந்தது. இதனால் பதிவை புதுப்பிப்பதற்கு அதிக நேரம் செலவாகியது. ஆனால் தற்போது எல்லா துறைகளிலும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு பதிவை ஆன்லைன் வாயிலாக இணையதளத்தில் சென்று புதுப்பித்து கொள்ளலாம். இதற்காக https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணைதளத்திற்கு சென்றுவிட்டு புதுப்பிக்க தவறிய பதிவை புதுப்பித்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் தங்களின் கல்வித்தகுதி குறித்த தகவல்களையும் இதில் புதுப்பித்து கொள்வதற்கான வசதிகளும் இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று முதல் வரும் மார்ச் 1ஆம் தேதி வரை பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் இணையதள முகவரி வாயிலாகவோ அல்லது அருகில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை கொடுத்து புதுப்பித்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *