கடவுள் துகள் கண்டறிந்த ஸ்டீபன் ஹாக்கிங், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் ஆகியோரும் மாற்றுத் திறனாளிகள் தான். எனவே மாற்றுத்திறனாளிகளின் மாண்பைக் காப்போம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவோம் என்பதை சமூகத்துக்கு எடுத்துரைக்கும் விதமாக திருச்சி மாவட்டம், தாத்தையங்கார் பேட்டை காருகுடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாற்றுத்திறனாளிகளையும் சக மனிதர்களாய் மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி

மாற்றுத்திறனாளிகளின் மாண்பை உயர்த்துவோம்” என்ற முழக்கத்தோடு இன்று பேரணியி தா.பேட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் காஞ்சனா பேரணியைத் துவக்கி வைத்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதாமற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் சசிகுமார், சரவணன் சுகுணா, புஷ்பலதா சிறப்பு ஆசிரியர் தமிழ்க்கொடி ஆகியோரும் பள்ளியின் ஆசிரியர்களும் அங்கன்வாடி ஆசிரியர்களும் பேரணியை ஒருங்கிணைத்தனர். பள்ளியின் அனைத்து மாணவர்களும் கலந்துகொண்ட இந்தப் பேரணி காருகுடியின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *