திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் இவரது மகன் சதீஷ் வயது 21. இவர் இன்று காலை தனது உறவினருக்கு சொந்தமான டிராக்டர் வாகனத்தை எடுத்துக் கொண்டு அதே ஊரை சேர்ந்த மருதையான் கோவில் அருகே உள்ள நஞ்சை நிலத்தில் உழவு ஓட்டுவதற்காக சென்றபொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகே இருந்த பாசன கிணற்றில் விழுந்தது.

மேலும் கிணற்றில் தண்ணீர் இருந்ததால் டிராக்டர் மூழ்கியது. இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி சேர்ந்தவர்கள் உடனடியாக கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த சதிஷ்சை மீட்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுகனூர் போலீசார், வருவாய்த்துறையினர் கிரேன் மூலமாக டிராக்டரை மீட்டனர். மேலும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி உள்ளே விழுந்த வாலிபரை தேடும் பணி ஈடுபட்டனர். அப்போது வாலிபர் சதீஷ் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *