இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்று பரவலை அதிகரித்து வருகிறது. அதனையடுத்து மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என பல மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய நிலையில். தற்போது தமிழகம் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் 500 ரூபாய் அபராதம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *