திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வசித்து வருபவர் பிரித்விராஜ் வயது 47 இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 3- மாதங்களுக்கு முன்பு புதிதாக எலக்ட்ரிக் பைக்கை வாங்கி ஓட்டி வந்துள்ளார்.

எலக்ட்ரிக் பைக் வாங்கி 3 மாதம் கூட ஆகத நிலையில். பலமுறை பழுதாகி விட்டதாக தெரிகிறது; மேலும் இந்த எலக்ட்ரிக் பைக்கை வாங்கியபோது ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்தால் 120 முதல் 180 கிலோமீட்டர் வரை போகும் என்று நிறுவனம் கூறி இருந்த நிலையில்,

நண்பர்களுடன் இந்த பைக் 44 கிலோமீட்டர் ஓட்டி சென்ற நிலையில் திடீரென பாதி வழியில் நின்றதால் ஆத்திரம் அடைந்த மருத்துவர் பிரித்விராஜ் தனது எலக்ட்ரிக் பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளார்.

இந்த வீடியோ  சமுக வலைதளங்களில்  வைரலாக பரவிவருகிறது இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *