சமீப காலங்களில் திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் பெருமளவில் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் அடிப்படையில்மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு தூத்துக்குடி துணை இயக்குனர் பாலாஜி தலைமையில் 12 பேர் அடங்கிய குழு நேற்று இரவு சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.சோதனையின் போது விஜய்,மணிகண்டன், செல்வக்குமார்,கோபி ஆகிய 4 பயணிகள் தங்கள் உடை மற்றும் உடைமைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த 3.400 கிலோ கிராம் எடை கொண்ட ரூ 1.60 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.மேலும் இந்த கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த குருவிகள் 3 பேர் என மொத்தம் 7 பேரிடம் வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்