திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் முழு எழுத்தறிவு பெறுவதற்கான இயக்கத் தொடக்க விழா இன்று நடைபெற்றது.‌ இவ்விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மணிகண்டம் ஒன்றியம் கே. கள்ளிக்குடியில் தொடங்கி வைத்தார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒருங்கிணைப்பின் படி மாவட்ட கல்வி அலுவலர் வட்டகல்வி அலுவலர் கல்வித் திட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு இடத்திலும் கற்பிக்கும் பணியினை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் ஊராட்சிமன்ற தலைவர்கள் தன்னார்வ அமைப்பினர் ஒருங்கிணைந்து நடத்த உள்ளனர்.

அதனடிப்படையில்மணிகண்டம் ஒன்றியத்தில் 11 2021 மக்கள் தொகையின் கணக்கின்படி 14 89 977 நபர்கள் உள்ளனர் அவர்களின் கையெழுத்து போட எழுத்தறிவு இல்லாதவர்கள் 4599 நபர்கள் பெண்கள் 3576 ஆண்கள் 913 பேர் உள்ளனர்முதலில் அவர்கள் கையெழுத்து போடுவதற்கும் பின்னர் படிக்கவும் 89 நாட்களில் இலக்காகக் கொண்டு செயல்பட திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றிய பொழுது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி நபர்கள் இவ்வியக்கத்தின் ஆள் பயன்பெற இருக்கிறார்கள் எனவும் இதை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க ஆவன செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *