கோவா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அங்கு பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியில், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் நில உரிமையை வழங்குவோம். வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், கோவா மக்களுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம், தண்ணீர் வழங்கப்படும்டெல்லியைப் போலவே, கோவாவின் ஒவ்வொரு கிராமம் மற்றும் மாவட்டத்திலும் சிறந்த மற்றும் இலவச சுகாதாரத்திற்காக மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் திறக்கப்படும். விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிறகு விவசாய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *