திருச்சி மாநகராட்சி அவசரக் கூட்டம் மற்றும் 2022 -23 பட்ஜெட் விவாதக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் புதிய மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், துணை மேயர் திவ்யா உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் நடைபெற்ற விவாதம் வருமாறு;-

மதிவாணன் மண்டல குழு தலைவர்;-பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவுபடுத்த தாங்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள் .ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை .அனைத்து வார்டுகளுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சுஜாதா( காங்கிரஸ்)

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி களில் பிரதானமாக இரட்டை வாய்க்காலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜவகர் (காங்கிரஸ்)

திருச்சி மாநகராட்சியில் இருக்கக் கூடிய ஓர் ஆசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகளை கொண்டுவந்தால் அடித்தட்டு மக்கள் பயனடைவார்கள்.

அம்பிகாபதி (அதிமுக)

திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து வார்டுகளிலும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். நெருக்கடி அதிகமாக இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து உயர்மட்ட பாலங்கள் கொண்டுவர வேண்டும். இந்த மாநகராட்சியில் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் கூடுதல் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. அதேபோன்று கிழக்கு திருவெரும்பூர், ஸ்ரீரங்கம் தொகுதி களில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படவில்லை என்றார்.

இதை எடுத்து திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம் நாகராஜ் மற்றும் பலர் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. மேயர் அன்பழகன் பதிலளிக்கும்போது,

அதிமுக மேயர் இருந்தபோது எதிர்கட்சி கவுன்சிலர்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கட்சிப் பாகுபாடு இல்லாமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இந்த பட்ஜெட்டில் அனைத்து நாடுகளுக்கும் தலா 50 லட்சம் நிதி சீராக ஒதுக்கப்பட்டுள்ளது. எழுதிக் கொடுத்ததை இவ்வாறு பேசிக் கொண்டிருக்காதீர்கள். என்றார் இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் அம்பிகாபதி , அரவிந்தன், அனுசியா ஆகியோர் தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *