திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே “எங்கிருந்தும் எந்நேரத்திலும்” இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, https://tamilnilam.tn.govin/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம்.

 உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணத்தை இணையம் வாயிலாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் நிலையை https://eservices.tn.gov.in/eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

பட்டா மாறுதலின் ஒவ்வொரு நிலையும் மனுதாரருக்கு ‘குறுஞ்செய்தி் வாயிலாக தெரிவிக்கப்படும். பட்டாமாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின், பொதுமக்கள் (1) பட்டா மாறுதல் உத்தரவு நகல் (2) பட்டா / சிட்டா. (3)புலப்படம், (4)அ-பதிவேடு ஆகியவற்றை ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்” https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்