இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பது மிக முக்கிய கடமையாகும், 30 நாட்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம் இந்த ஆண்டிற்கான நோன்பின் முதல் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் காந்தி மார்க்கெட் அருகே உள்ள பேகம் பள்ளிவாசலில் இன்று திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர ஹிலால் கமிட்டி உறுப்பினர்கள், மற்றும் திருச்சி மாவட்ட அரசு டவுன் ஹாஜி மௌலவி ஜலில் சுல்தான் அலீம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய ஜமாத்துல் உலமா சபைத் தலைவரும், அரபிக் கல்லூரி முதல்வருமான முகமது ரூஹில் ஹக் ஹஜரத் செய்தியாளருக்கு போட்டியாக தெரிவித்தார் அப்போது அவர் கூறுகையில் ..

 கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மற்றும் பல பகுதிகளிலும் ரமலான் முதல் பிறை தென்படாததால் இன்று ஷபான் மாததின் பிறை 30 என்பதாலும் நாளை இரவு தராவியா தொழுகை ஆரம்பம் எனவும் 24. O3.2023 வெள்ளிக்கிழமை அதிகாலை நோன்பு நோற்கலாம் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *