தமிழகத்தில் நேற்று சென்னை, கோவை, ஏர்வாடி, தேனி, கடலூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் மற்றும் மதரஸாக்களில் மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிரடி சோதனை ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் அதன் தலைவர்களும் 50க்கு மேற்பட்ட நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் இமாம்.அப்துல்லாஹ், ஹஸ்ஸான் பைஜி ஆகியோர் ஒருங்கிணைப்பில் 500க்கு மேற்பட்டோர் மத்திய அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்தும், எந்த முகாதாரமின்றி ஆத்துமீறி கைது செய்யும் தேசிய புலனாய் முகாமையின் போக்கினை கண்டித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, துணை ஒருங்கிணைப்பாளர் உதுமானலி, ஜமாத்து இஸ்லாமிய மாவட்ட செயலாளர் சாகுல், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் சபியுல்லாவகிது, இஸ்லாமிய ஹிந்த் மாநில ஆலோசகர் ஆலோசனரி குழு உறுப்பினர் ஷேக் அப்துல்லா,

எஸ்.டி.பி.ஐ கட்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, மஜ்லிஸ் கட்சி மாநில செயலாளர் இக்பால், எஸ்.டி.பி.ஐ கட்சி வடக்கு மாவட்ட தலைவர் நியாமத்துல்லா ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஜாகீர் மாவட்ட செயலாளர் என்.டி.ஐ.எப் உமர் அல்பர் நசீர்,நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *