திருச்சி திருவெறும்பூர் நொச்சிவயல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வித்யாலட்சுமி சாவுக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும்.

அந்த வழக்கினை கொலை வழக்காக மாற்ற வேண்டும். குற்றவாளிகளை தப்பவிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

மாணவியின் உறவினர்களுடன் பேரமைப்பு இணைந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இறந்த மாணவிக்கு நியாயம் கேட்டு பேரமைப்பின் மாநில ,மாவட்ட, மாநகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *