திருச்சி மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்ற மேல்நிலை அலுவலர்கள் நல சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி அருண் ஓட்டல் சுமங்கலி மகாலில் இன்று நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க செயலாளர் ஜோசப் சௌந்தர்ராஜன் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் இச்சங்கத்தை தோற்றுவித்து கடந்த 11 ஆண்டு காலமாக அதனை முறையாக வழிநடத்தி இன்று வரை சீரும் சிறப்புமாக இச்சங்கம் இயங்கிட தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட முன்னாள் தலைவர் மற்றும் இந்நாள் கௌரவத் தலைவர் கூடுதல் இயக்குனர் கனகசபை அவர்களின் பணியை பாராட்டி தங்க மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மேலும் புதிய உறுப்பினர்கள் இந்த ஆண்டு விழாவில் இணைந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து 70 வயது முதல் 90 வயது நிறைவு செய்த உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கூடுதல் இயக்குனர் உமாபதி இணை இயக்குனர் ஓய்வு பெற்ற குஞ்சிதபாதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகி மாசி தீர்மானங்களை வாசித்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றார் மேலும் சங்க வரவு செலவு கணக்கினை சங்க பொருளாளர் சூர்யக்குமார் பொதுக்குழுவின் முன் வாசித்து ஒப்புதல் பெற்றார் இறுதியாக ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெஞ்சமின் நன்றியுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்