திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 15 வது ஆண்டு தின விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சுஜித் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து கேர் கல்லூரி கல்வி மற்றும் விளையாட்டு துறை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார் .

முன்னதாக பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாந்தி 23 மற்றும் 24 ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கை வாசித்தார் மேலும் விழாவில் கேர் கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் சந்த் தலைமை தாங்கினார். கேர் பொறியியல் கல்லூரியின் 15 ஆவது ஆண்டு தின விழாவில் துறை தலைவர்கள் பேராசிரியர் உதவி பேராசிரியர் மாணவர் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *