அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு புதிதாக மாவட்ட கழக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ஆர் மனோகரன் அவர்கள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட சோமரசம்பேட்டை மற்றும் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட குழுமணியில் உள்ள அதிமுக கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

*இந்நிகழ்ச்சியில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார், அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கோப்பு நடராஜ், மணிகண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகருப்பன், அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால், மணப்பாறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர் சுந்தர்ராஜ், திருவானைக்கோவில் பகுதி கழக செயலாளர் டைமன் திருப்பதி

சிறுகமணி பேரூராட்சி கழக செயலாளர் செந்தில்குமார், மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மாவட்ட மீனவரணி செயலாளர் கண்ணதாசன் மற்றும் மாவட்டக் கழக ஒன்றிய கழக பேரூராட்சி கழக பகுதி கழக வட்டக் கழக செயலாளர் நிர்வாகிகள் , சார்பு அணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்