ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஐ நெருங்கி உள்ளது சுமார் 1000 திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது வரை மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் உயிர் இழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது

இந்நிலையில் இன்று திருச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக மாநில தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விபத்து தொடர்பான புகைப்படங்களை கைகளில் ஏந்திய படி, மெழுகுவர்த்தி ஏந்தி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் சுப.சோமு, மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன், மணிவேல் எஸ்.சி,எஸ்.டி பிரிவு தலைவர் பாக்யராஜ், செந்தூர் வாசன். மோகன், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் சரவணன் சுப.சோமு,கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல், கனகராஜ், மகேந்திரன் மற்றும் அப்துல் குத்தூஸ், கோபி, பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை, ஜெகதீஸ்வரி பஜார் மைதீன் உள்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *