மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தில்லை நகரில் உள்ள கி.ஆ.ப.விஸ்வநாதம் பள்ளியில் திமுக 22வது வட்ட கிளை மற்றும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை மாநகராட்சி துணை மேயர் அன்பழகன் துவக்கி வைத்தார். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இதேபோல் திருச்சி நாகமங்கலம் பகுதியில் திமுக நிர்வாகி கமலகருப்பையா கட்சி கொடி ஏற்றி வைத்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து அப்பகுதி உள்ள சமுதாய கூடத்தில் இலவச ரத்த அழுத்த பரிசோதனை ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் தேவைப்படுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் பொது மருத்துவ ஆலோசனை ஆகியவை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *