புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் ஊராட்சி, இறையூரில் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த சாதியை வெறியர்களை உடனடியாக கைது செய்திட கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர் சிகிச்சையும் இழப்பீடும் வழங்கிட கேட்டும்

தமிழகம் முழுவதும் தீண்டாமை கொடுமைகளை கலைந்திட இரும்பு கரம் கொண்டு அடக்கிட கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI காட்டூர் பகுதி குழுவின் சார்பில் திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சந்தோஷ் பகுதி செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் தோழர் பா.லெனின் கண்டன உரையாற்றினார்.

மாவட்ட துணை செயலாளர்கள் யுவராஜ், நிவேதா மற்றும் பகுதி நிர்வாகிகள் சுபாஷ் சந்திர போஸ், சாதிக், மோகன், தினேஷ் குமார் முன்னிலை வகித்தனர் இறுதியாக தோழர் பாண்டியன் நன்றி கூறினார் திரளான தோழர்கள் பங்கேற்று தீண்டாமை கொடுமைக்கு எதிராக கோஷமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *