சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி, காணிக்கை உண்டியல்களில் காணிக்கையும் செலுத்தி விட்டு செல்கின்றனர். அவ்வாறு பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை உண்டியல்களை கோவில் நிர்வாகம் மேற்பார்வையில் மாதம் இருமுறை எண்ணப்பட்டு வருகிறது.

இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் திருமதி.கல்யாணி தலைமையில் கோவில் வளாகத்தில் உள்ள கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் காணிக்கை உண்டியல்களில் என்னும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ரூ 1கோடியே 45 லட்சத்து 09 ஆயிரத்து 609 ரூபாய் ரொக்கம், 3 கிலோ 860 கிராம் தங்கம், 6 கிலோ 475 கிராம் வெள்ளி , அயல்நாட்டு நோட்டுகள் 201 ம், அயல்நாட்டு நாணயங்கள் 526 காணிக்கையாக பெறப்பட்டன என கோவில் இணை ஆணையர் திருமதி.கல்யாணி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *