இன்றும், நாளையும் திருச்சி ஜங்ஷன் அருகே ஆர்.சி. பள்ளியில் நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

8, 10, 12, 14, 17 வயது நிரம்பிய மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக தலா 5 பிரிவுகள் என மொத்தம் 10 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

மாணவர்களுக்கு 15 பரிசுகளும், மாணவிகளுக்கு 10 பரிசுகளும் வழங்கப்படுகிறது. இது தவிர பொதுப் பிரிவுக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்ட செஸ் அசோசியேசன் புரவலர் ரவீந்திரன், தலைவர் ஆனந்தராஜா, செயலாளர் தினகரன், துணைத் தலைவர்கள் மதுசூதனன், வெங்கட்ராமன், சுந்தர்ராஜன், இருதயராஜ், லட்சுமி பிரபா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *