தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்டம் உலக மகளிர் நாள் விழா குறித்த கருத்தரங்கம் மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சத்தியவாணி தலைமையில் திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

மகளிர் துணை குழு வினை அமைப்பாளர் மேனகா தேவி வரவேற்புரை ஆற்றினார் மகளிர் பாதுகாப்பு நலம் குறித்த பல்வேறு கருத்துக்களை மாநில துணைத்தலைவர் பரமேஸ்வரி கருத்தரையில் பேசினார் நிகழ்ச்சிக்கு கன்டோன்மென்ட் காவல்துறை உதவியாளர் கென்னடிசிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு டாக்டர் உமா வேல்முருகன் மாவட்டத் தலைவர் பால்பாண்டி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் சரஸ்வதி அல்போன்சா விமலா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் மாநில துணைத்தலைவர் பெரியசாமி நிறைவு உரையை ஆற்றினார் முடிவில் மாவட்ட இணைச் செயலாளர் அமுதவள்ளி நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்