Month: March 2023

திருச்சி ஏர்போர்ட் வந்த பயணியிடம் துப்பாக்கி குண்டு – போலீஸ் விசாரணை.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ஹைதராபாத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொண்டு இருந்தனர் அப்போது இந்த…

திருச்சியில் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அகிலா. குறு விவசாயியான அகிலாவின் தந்தையார் வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை தனது தந்தையார் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டி அகிலா மண்ணச்சநல்லூர்…

கோவில் பூட்டை உடைத்து 2 உண்டியல்கள், அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க செயின் திருட்டு.

திருச்சி பொன்மலை அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை பரமசிவம் தெருவில் ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. கோவிலானது மெயின் சாலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இங்கு அப்பகுதியில் சுற்றியுள்ள…

மாடியில் தூங்கிய தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்.

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் மாரியாயி, இவருக்கு கோபி வயது 29, முத்தையா வயது 31 என இரு மகன்கள் உள்ளனர். கோபி கூலி வேலை செய்து வருகிறார். முத்தையா மனநலம் பாதிக்கப்பட்டவர்…

சமயபுரம் கோவில் உண்டியலில் கடந்த 6 நாட்களில் ரூ.93.39 லட்சம்,1.2 கிலோ தங்கம், 2.7 கிலோ வெள்ளி காணிக்கை.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து…

ஆரிகாமி பேப்பர் கொண்டு மிக பெரிய தேசிய கொடி – உலக சாதனை குறித்து பள்ளி தலைவர் மாதவ மனோகரன் பேட்டி.

திருச்சி வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் சார்பில் ஆரிகாமி இதயங்களை அடுக்கி வைத்து உருவாக்கப்படும் உலகின் மிகப் பெரிய தேசியக் கொடி உலக சாதனை நிகழ்வு நடைபெறுவது குறித்து பள்ளியின் தலைவர் மாதவ மனோகரன், பள்ளி செயலர் ரஜினிகாந்த், பள்ளியின் முதல்வர்…

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து வெல்பேர் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும், எதிர் கட்சிகளின் குரலை நசுக்க துடிக்கும் பாஜக அரசை கண்டித்தும் திருச்சி மாவட்ட வெல்பேர் கட்சியின்…

தரைக்கடை வியாபாரிகளை வஞ்சிக்காத வண்ணம் மாநகராட்சி மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கத்தினர் கோரிக்கை.

மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கத்தின் திருச்சி மாவட்ட பொது செயலாளர் அஷ்ரப் அலி, பாலக்கரை பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்… திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், Nsb சாலை, தெப்பக்குளம், பெரிய கடை வீதி, சிங்காரத்…

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்.

திருச்சி மாநகராட்சிக்காண 2023 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது . திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதி குழு தலைவர் முத்துச்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் 2022…

திருச்சி சாலையில் வீலிங் செய்த வாலிபர் – ஆலேக்காக தட்டி தூக்கிய போலீஸ்.

சினிமாவில் வரும் ஹிரோவை போன்று வேகமாக வீலிங் செய்தபடி திருச்சி காவேரி பாலம் மற்றும் தெப்பக்குளம் சாலை உள்ளிட்ட இடங்களில் வலம் வந்ததோடு மட்டுமல்லாது அதனை விதவிதமான பேக்ரவுண்ட் மியூசிக்கை போட்டு இன்ஸ்டாவில் வெளியிட்டதால் கடந்த மூன்று நாட்களாக திருச்சி மாநகரில்…

தொழில் அதிபர் ராமஜெயம் அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர்கள் அஞ்சலி.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும் கழக முதன்மைச் செயலாளரும்மான கே என் நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே என் ராமஜெயம் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அமைச்சர் கே.என். நேருவின் இல்லத்தில் பள்ளி…

ஊரக வளர்ச்சித் துறை ஓய்வு பெற்ற மேல்நிலை அலுவலர் நல சங்கத்தின் ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.

திருச்சி மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்ற மேல்நிலை அலுவலர்கள் நல சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி அருண் ஓட்டல் சுமங்கலி மகாலில் இன்று நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க செயலாளர் ஜோசப் சௌந்தர்ராஜன் வரவேற்புரை…

அதிமுக பொ.செ எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வருகிற 2024 எம்.பி தேர்தலில் அதிமுக 40/40 வெற்றி பெறும் – கவுன்சிலர் அரவிந்த் பேட்டி.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுதும் அதிமுகவினர் இதனை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் படி ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனிதேர்த்திருவிழா(கோரதம்) இன்று(28-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.…

திடக்கழிவு மேலாண்மை திட்ட வள மீட்பு பூங்கா அமையவுள்ள இடத்தை மாற்ற கோரி கலெக்டரிடம் மனு.

திருச்சி திருவரம்பூர் தாலுகா கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எழில் நகர் குடியிருப்போர் சங்கம், திருச்சி வளர்ச்சி குழுமம் சார்பில் திருச்சிராப்பள்ளி எழில் நகர் குடியிருப்புக்கு அருகில் மயானம் மற்றும் குளம் உள்ள பகுதி அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வள மீட்பு…

தற்போதைய செய்திகள்