திருச்சி கண்டோன்மெண்ட் ஜயப்பன் கோவில் அருகில் தனிப்படை அதிகாரி உமாசங்கரி வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது , சந்தேகத்தின்பேரில் புத்தூர் , VNP தெருவை சேர்ந்த ஜெயராமன் 33 என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது , அவரிடமிருந்து இளைய தலைமுறையினரை சீரழிக்கும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களான ஹான்ஸ் , சைனி , விமல் , கணேஷ் , கூல்லிப் , RMD பான்பராக் போன்ற குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக TN 45 CB 5618 என்ற இருசக்கர வாகனத்தில் மூட்டைகளில் கடத்திய வந்தவரை பிடித்து ,

சுமார் ரூ .2,00,000 / – இலட்சம் மதிப்புள்ள , ஹான்ஸ் – 6 மூட்டைகள் , விமல்பாக்கு – 12 மூட்டைகள் , கூல்லிப் – 2 மூட்டைகள் மற்றும் RMD பான்பராக் – 20 பாக்ஸ் ஆகிய குட்கா பொருள்களை பறிமுதல் செய்தும் , குட்கா பொருள்களை கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும் , மேற்படி நபரை கைது செய்தும் , வழக்குப்பதிவு செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் திருச்சி மாநகரத்தில் , இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா , குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து , அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *