திருச்சி திருவரம்பூர் குமரசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி மேகலா இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் ஜார்ஜ் திருவரம்பூர் பகுதியில் வீட்டை ஒன்றை கட்டினார். அந்த வீட்டில் ஜார்ஜின் தாயார், மனைவி மற்றும் அண்ணன் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஜார்ஜின் அண்ணன் போஸ்கோ வீட்டை அபகரிக்கும் நோக்கில். தனது தாய் மற்றும் தம்பி ஜார்ஜின் மனைவி கைக்குழந்தை ஆகியோரை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். இது குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஜார்ஜின் மனைவி மேகலா அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *