திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கிராப்பட்டி பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளி வாக்கு சாவடி மையத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது வாக்கை பதிவு செய்தார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ராஜ்யசபா திமுக எம்பி சிவா தனது வாக்கை பதிவு செய்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன் திருச்சி கே கே நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் திருச்சி எடத்தெரு யது குல சங்கம் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *