அரியலூர் மாவட்டத்தில் இருந்து தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. லால்குடி அடுத்து வாளாடி வந்த போது தனியார் பஸ் கட்டுப்பாட்டு இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.தொடர்ந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி தனியார் பஸ் நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர் பலியானார்.

மேலும் பஸ்சில் பயணம் செய்தவர்கள் அவர்கள் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த பயணிகளை மீட்டனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்ததால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்தில் இருந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.தனியார் பஸ் போட்டி போட்டு கொண்டு பயணிகளை ஏற்றுவதற்காக அதிவேகமாக சென்றதால் இதுபோன்ற விபத்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *