மறைந்த திமுக முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும் -முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 71 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதி மற்றும் ராஜா பார்க் அருகே திமுக சார்பில் அன்பில் பொய்யாமொழி நினைவாக அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர் மோர் பந்தலை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் திமுக நிர்வாகிகள் பகுதி கழக செயலாளர் வட்டக் கழக செயலாளர் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்