திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவரது மகன் நாகூரான் என்கிற நாகூர் மீரான் (வயது 29). இவர் கடந்த 4 நாட் களுக்கு முன் இ.பி.ரோடு அந் தோணியார் கோவில் தெரு ஆர்ச் அருகே தனது சகோதரி தாஜ் நிஷா (28) என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் நாகூர் மீரானிடம், ஒரு பிரச்சினை தொடர்பாக பஞ்சாயத்து பேச வேண் டும் என கூறி அழைத்து சென்றனர். இந்த நிலையில் 4 நாட்கள் ஆகியும் நாகூர் மீரான் வீடு திரும்பவில்லை. இது குறித்து நாகூர் மீரானின் சகோதரி தாஜ்நிஷா மலைக் கோட்டை போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார்.

அந்த புகாரில், திருச்சி பட்டவர்த் ரோடு பகுதியை சேர்ந்த சண்டி என்கிற சக்திவேல், விரு மாண்டி. அரசு, டேஞ்சர் பாலா ஆகியோர் பஞ்சாயத்து பேச வேண்டும் என்று கூறி எனது சகோதரர் நாகூர்மீரானை கடத்தி சென்றுவிட்டனர். இந்த நிலையில் 4 நாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்ப வில்லை. எனவே, அவர்களிடம் இருந்து எனது சகோதரரை மீட்டு தரவேண்டும் என்று கூறியுள்ளார். போலீசார், அந்த 4பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் நாங்கள் நாகூர்மீரானை அழைத்து சென்றோம். அதன் பின்னர் அவரை உடனடியாக அனுப்பி வைத்துவிட்டோம். பின்னர் அவர் எங்கு சென்றார் எங்களுக்கு தெரியாது என தெரிவித்தனர்.

எனினும் அவர்களது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. சம்பவத்தன்று நாகூர் மீரானை 4 பேரும் சேர்ந்து ஓடத்துறைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அந்த 4 பேரும் கஞ்சா போதையில் இருந்த நிலையில் ஒரு பிரச்சினை தொடர்பாக பேசியதில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 4 பேரும் சேர்ந்து நாகூர் மீரானை அடித்துக்கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை காவிரி ஆற்றில் வீசியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மலைக் கோட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சண்டி என்கிற சக்தி வேல், விருமாண்டி. அரசு, டேஞ்சர் பாலா ஆகிய பேரை கைது செய்தனர். மேலும் நாகூர்மீரானின் உடலை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *