திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குடும்பத்துடன் வசித்து வரும் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் இன்று கடைசி பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு அதே பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரயில்வே மேம்பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த பொத்தமேட்டுப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த கேசவன் வயது 22 என்ற வாலிபர் பள்ளி மாணவியை வழிமறித்து கையை பிடித்து தன் காதலை ஏற்றுக் கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பள்ளி மாணவி வாலிபரின் கையை உதறி தள்ளி விட்டு அங்கிருந்து வேகமாக நடந்து செல்ல முயன்றார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பள்ளி மாணவியின் கழுத்து பகுதி உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் கொடூரமாக குத்தியுள்ளான். வலியால் துடி துடித்த மாணவி சத்தம் போட்டு கத்தவே அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு வாலிபரை பிடிக்க முயன்றனர் வாலிபர் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடிவிட்டார். உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி மயங்கி விழுந்த பள்ளி மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பள்ளி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் கேசவன் ஏற்கனவே இந்த மாணவியை கடத்திய வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் தலைமறைவான வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பள்ளி மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மணப்பாறை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *