திருச்சி வயலூர் ரோடு வாசன் நகர் மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டினை ரூ. 5 லட்சம் ஒத்திகைக்கு எடுத்து குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் ஒத்திகை பணத்தை அவர் திரும்ப கேட்டார். ஆனால் அதன் உரிமையாளர் கொடுக்க மறுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ராஜம்மாள் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தார்.

பின்னர் கலெக்டர் கார் அருகாமையில் தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக் முயன்றார். போலீசார் அவரை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *