நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி ப.குமார், அமைப்பு செயலாளர் மனோகரன், உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *