மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டு வருகிறார். இன்று காலை  தஞ்சையில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை பார்வையிட்ட பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லால்குடி அருகே உள்ள கூழையாற்றில் 23.50 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள இருதயபுரம் வழியாக பாயும் நந்தியாற்றில் 1கோடியே 94லட்சம் மதிப்பீடில் மேற்கொள்ளப்பட்டு வந்த தூர்வாரும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்த நிலையில் அதனையும் முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் மற்றும் ஊட்டத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காட்டறுகள் இந்த நந்தியாற்றில் கலக்கிறது – இதனை தாண்டி பெருவனை வாய்க்கால்,புள்ளம்பாடி வாய்கால், பங்குனி வாய்க்கால் போன்ற வடிகால்கள் இந்த நந்தியாற்றில் கலப்பதால் வருடத்தில் குறைந்தது 20நாட்கள் அதிகமான வெள்ளப்பெருக்கு இந்த நந்தியாற்றில் ஏற்படுகிறது –

மேலும் புள்ளம்பாடியில் இருந்து நந்தமாங்குடி வரை விவசாய நிலப்பரப்புகளில் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது நந்தியாறு முழுவதுமாக தூர்வாரப்பட்டுள்ள நிலையில் தங்கு தடை இன்றி தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது அதனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போதுஅமைச்சர்கள் துரைமுருகன்,எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்,கே.என்.நேரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் பொதுப்பணிததுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *