தஞ்சை மாவட்டத்தில் டெல்டா பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர் வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்தார் அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் பிரதீப் குமார்,

எம் பி திருநாவுக்கரசு, ஐ ஜி கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா, மேயர் அன்பழகன் மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பூ கொத்து வழங்கி வரவேற்றனர். திருச்சி விமான நிலையத்தில் முதல்வரை காண காத்திருந்த திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *