திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது இதில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்புமனு தாக்கல் செய்தார் அப்பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத காரணத்தால் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்ட பின்பு இன்று முதல் முதலாக திருச்சிக்கு வந்தார் அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து அவர் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார் இதில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி க்கு வாழ்த்து தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *