போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட போக்குவரத்து துணை ஆணையராக பணிபுரிந்து வருவது அழகரசு. இவர் திருவண்ணா மலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக இரண்டு கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தற்பொழுது திருச்சி மத்திய பேருந்து நிலையம் வில்லியம் சாலையில் உள்ள அகிலா மேன்ஷன் தங்கி உள்ளார். இன்று காலை 6 மணிக்கு திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் இவரது வீட்டை சோதனை செய்து வருகின்றனர். மேலும் அழகரசு வைத்திருந்த ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *