திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகம் தகவல் அறிவியல் துறை சார்பில் புத்தகங்களை பாதுகாத்தல் பற்றிய தேசிய அளவிலான ஒருநாள் பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வராக மகா தேசிகன் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக கலைப்புல முதன்மையர் முனைவர் லட்சுமி வரவேற்புரை ஆற்றிட கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி தொடக்க உரையாற்றினார். துணை முதல்வர்கள் முனைவர் மீரா பார்த்த சாரதி மற்றும் முனைவர் சத்ய நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் முனைவர் சீனிவாச ராகவன் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகர் முனைவர் பெருமாள் திண்டுக்கல் ஜீ.டி.என் கலைக்கல்லூரி நூலகர் அரவிந்த் ஆகியோர் கலந்துகொண்டு புத்தகங்களை எப்படி பாதுகாப்பது என்பதை பயிற்சி உடன் மாணவ மாணவிகளுக்கு விளக்கிக் கூறினர்.

இந்த ஒரு நாள் பயிற்சி பட்டறையில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நிறைவாக முனைவர் பிரபாகரன் நன்றி உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகம் மற்றும் தகவல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *