திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக வரும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள பலகாரவகைகள் , இனிப்புகள் விற்பனையாளர்கள் மற்றும் கார வகைகள் , கேக்குகள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள் , நுகர்வோருக்கு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் சட்ட மன்ற அறிவிப்பு விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது . இதில் திருச்சி மாநகராட்சி , அந்தநல்லுார் மற்றும் மணிகண்டம் வட்டாரம் , திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி , லால்குடி , புள்ளம்பாடி மற்றும் மணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் இனிப்பு , கார மற்றும் பேக்கரி தயாரிப்பாளர்கள் 80 – க்கு மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர் .

அதன் தொடர்ச்சியாக மாலை 3.30 மணியளவில் முசிறி பகுதி துறையூர் , உப்பிலியாபுரம் , தாத்தையங்கார்பேட்டை பகுதியில் உள்ள இனிப்பு மற்றும் பேக்கரி உணவு உதயாரிப்பாளர்கள் 50 – க்கும் மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டனர் . இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் . ரமேஷ்பாபு தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பேக்கரி சங்க தலைவர் வைத்தியலிங்கம் , துணை தலைவர் ஆனந்தபாபு , மற்றும் பெரிய மிளகு பாறை வர்த்தக சங்க தலைவர் மகாதேவன் மற்றும் பொருளார் சாமுவேல் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள் . செயலாளர் கமால் செயலாளர் ஜான்வெஸ்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கூறுகையில் உணவு பொருள் தாயாரிப்பாளர்கள் , பேக்கரி , மற்றும் விற்பனையாளர்கள் , பலகார சீட்டு கட்டி இனிப்பு மற்றும் கார பலகார வகைகள் செய்து தரும் வியாபாரிகள் அனைவரும் உரிமம் / பதிவு சான்றுகள் பெறவேண்டும் என்றும் , இனிப்பு மற்றும் கார பலகார வகைகள் கலப்படமில்லாத சுத்தமான மூலப் பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் , பலகார வகைகள் , பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அவ்வுணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ , அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான நிறமிகளையோ பயன்படுத்தக்கூடாது என்றும் , பொட்டலமிடப்படும் அனைத்து இனிப்பு மற்றும் பலகார வகைகளில் தயாரிப்பாளர் முகவரி , தயாரிப்பு தேதி , காலாவதியாகும் தேதி , FSSAI எண் மற்றும் BATCH எண் கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்றும் இவ்வுணவு பொருட்களை ஈக்கள் , பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டாலோ உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக இருந்தாலோ அத்தகையை உணவு வணிகர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அறிவுறுத்தினார் . இதில் அலுவலர்கள் சையத் இப்ராஹீம் , இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு ஸ்டாலின்பிரபு , பாண்டி , வசந்தன் , பொன்ராஜ் , ரெங்கநாதன் ,மகாதேவன் , செல்வராஜ் மற்றும் அன்புசெல்வன் , ஆகியோர் செய்து இருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *