தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதிலும் குறிப்பாக இன்று முதல் அக்கினி வெயில் தொடங்கியுள்ளது இந்த கோடை வெயிலை சமாளிப்பதற்காக திருச்சி மாவட்டத்தில் அதிமுக திமுக மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் சேவை ஆற்றி வரும் திருச்சி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பாக திருச்சி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமை அலுவலகம் எதிரே கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள் ப.குமார், பரஞ்சோதி, சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் தர்பூசணி வெள்ளரிப்பிஞ்சு மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி ரத்தினவேல் முன்னாள் கவுன்சிலர்கள் வனிதா நாகநாதர் பாண்டி, மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் மற்றும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் திருச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *