திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் கிளை கோயிலில் புதிய கொடிமரம் அர்ச்சிப்பு மற்றும் கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

இந்த திருவிழா இன்று 10ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. மேலும் வருகிற 13ஆம் தேதி சிறப்பு திருப்பலியுடன் தேர்பவனியும், 14ஆம் தேதி நன்றி திருப்பலி யுடன் கொடியிறக்கம் நடைபெற உள்ளது.

முன்னதாக புனித அந்தோணியார் கோவிலில் இருந்து பங்கு மக்கள் கொடிபவனி ஊர்வலமாக ஏரிக்கரை சாலை அவ்வையார் பேரு ராஜா தெரு வழியாக அந்தோணியார் கோவிலை வந்தடைந்தது.

அதனைத்தொடர்ந்து கந்தர்வக்கோட்டை ஜீவஜோதி ஆசிரமம் அதிபர் அருட்பணி ஸ்தனிஸ்லாஸ் சிறப்பு திருப்பலி நடத்தி புதிய கொடிமரம் அர்ச்சிப்பு செய்து திருவிழா கொடி ஏற்றி வைத்தார். இந்த சிறப்பு திருப்பலியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *