அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன் தொகைக்கு இணையான பென்ஷனை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கும் மாற்றம் செய்து தர வேண்டும் என கோரி திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் பி எஸ் என் எல் ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர் சித்தி ராஜ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற டி ஜி எம்கள் குமரேசன், சுப்பிரமணியன், சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய துணைச் செயலாளர் ஜெயராமன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மத்திய அரசுக்கு இணையான பென்ஷன் மாற்றம் தேவை என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் கமலநாதன் நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்